search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர் மீது தாக்குதல்"

    • தனியார் ஆஸ்பத்திரியில் புகுந்து
    • நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் தூசி அடுத்த புதுப்பா ளையம் கூட்ரோட்டில் டாக்டர் அஞ்சானாத்திரி (வயது 30) என்பவர் கிளினிக் நடத்தி வருகிறார். பெண் டாக்டரை தாக்கிய கும்பல் இவரது கிளினிக்கிற்கு பெண்கள் உட்பட 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அப்போது அஞ்சா னாத்திரியிடம் கிளினிக்கை காலி செய்ய வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    டாக்டர் முடியாது எநோயாளிகள் அலறியடித்து ஓட்டம் ன்று கூறியதால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் கிளினிக்கிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர். அப்போது ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து காயமடைந்த அஞ்சானாத்திரி தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். டாக்டரை தாக்கிய சம்பவத்தில் முருகன் (வயது 57). தொழிலாளி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தலை மறை வானவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தனியார் ஆஸ்பத்திரியில் புகுந்து பெண் டாக்டரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×