search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர் கைது"

    உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் ரூ.2 கோடி ரூபாய் மதிப்புடைய மருந்துப் பொருட்களை திருடிய டாக்டர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் .
    லக்னோ :

    உத்திரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரில் இருந்து ஆக்ராவில் உள்ள குடோனுக்கு லாரிகள் மூலமாக கடந்த 13-ம் தேதி மருந்துப் பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டது.

    அப்போது சுமார் 100 அட்டை பெட்டிகளில் இருந்த ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மாயமாகின. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த உத்திரப்பிரதேச போலீசார் கடந்த ஒரு மாதமாக கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில், இந்த கொள்ளையில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காசியபாத் போலீஸ் எஸ்.பி வைபர் கிருஷ்னா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் ஊடகங்களிடம் கூறுகையில், ’இந்த கொல்லையில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அனில் குமார் எனும் டாக்டரும் ஒருவர். மற்ற 6 பேர் திருடிய மருந்துப் பொருட்களை சட்டவிரோதமாக மருந்தகங்களில் விற்பனை செய்ததால் டாக்டர் அனில் குமாரை கைது செய்துள்ளோம்’ என தெரிவித்தார்.

    மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் 4 கத்திகளும் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
    ×