search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயல்முறை விளக்க பயிற்சி"

    • ஒளி விளக்கு மூலம் பூச்சிகளை அந்த விளக்கில் உள்ள தட்டில் சோப்பு தண்ணீர் மண்ணெண்ணெய் வைத்து அதில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறையினை செயல் விளக்க பயிற்சியாக செய்து காண்பிக்கப்பட்டது.
    • செயல் விளக்க எந்திரத்தை வேளாண்மை இணை இயக்குநர் வழங்க, துணை இயக்குநர் அதன் பயன்கள், முக்கியத்துவம் பற்றியும் கூறினார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் வட்டாரம் மாங்கரை கிராம விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் சோலார் ஒளி விளக்கு பொறி இயந்திரம் வழங்கப்பட்டது.

    இந்த ஒளி விளக்கு மூலம் பூச்சிகளை அந்த விளக்கில் உள்ள தட்டில் சோப்பு தண்ணீர் மண்ணெண்ணெய் வைத்து அதில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறையினை செயல் விளக்க பயிற்சியாக செய்து காண்பிக்கப்பட்டது. இதில் பயனாளி மணிகன்டனுக்கு சூரிய ஒளி மூலம் பூச்சி கட்டுப்படுத்தும் விளக்கு முழு மானியத்தில் வழங்கி செயல் விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    இச்செயல் விளக்க எந்திரத்தை வேளாண்மை இணை இயக்குநர் அனுசுயா வழங்க, துணை இயக்குநர் விஜயராணி அதன் பயன்கள், முக்கியத்துவம் பற்றி கூறினார். நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் சந்திரமோகன் ஆலோசனைபடி எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சியாளர் தேவராஜன் செயல் விளக்கமாக விவசாயிகளுக்கு செய்து காண்பித்தார்.

    ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் பொன் தமிழரசு மற்றும் அருண்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • விபத்து தடுப்பு முறைகள் உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.
    • இப்பயிற்சியை நிலை அலுவலா் பொன்னுசாமி, தீயணைப்பு வீரா்கள் ஒருங்கிணைத்தனா்.

    திருப்பூர்:

    தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மேலாண்மை குறித்த செயல்முறை விளக்க பயிற்சி அவிநாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.இதில் மழை காலங்கள், கட்டட இடிபாடுகள், விபத்து உள்ளிட்ட இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டவா்களை எவ்வாறு மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது, வெள்ளக்காலங்களில் மின்சாதன பொருட்களை கையாளக் கூடாது, வீடு மற்றும் நிறுவனங்களில் எரிவாயு கசிவு ஏற்படும்போது செய்ய வேண்டியவை, விபத்து தடுப்பு முறைகள் உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.

    மேலும், பேரிடா் மேலாண்மை குறித்த விழிப்புணா்வு வாசங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.இப்பயிற்சியை நிலை அலுவலா் பொன்னுசாமி, தீயணைப்பு வீரா்கள் ஒருங்கிணைத்தனா்.

    ×