search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவாமிநாதசாமி கோவில்"

    • சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில்சி த்திரை பெருவிழா 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது

    தஞ்சாவூர்:

    அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு சித்திரை பெருவிழா வருகிற 28-ந்தேதி கொடியேற்ற த்துடன் தொடங்குகிறது.

    விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.

    தொடர்ந்து, வருகிற மே 2-ந்தேதி தன்னைத்தானே பூஜித்தலும், 6-ந்தேதி தேரோட்டமும், 7-ந்தேதி நடராஜர்-சிவகாமியம்மாள் மாணிக்கவாசகர் தேர்க்கால் பார்த்தல், ஊடல், வீதியுலா மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    தொடர்ந்து, மே 8-ந்தேதி விழா முடிந்து யதாஸ்தானம் செல்லுதல் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • அறுபடை வீடுகளில 4-ம் படைவீடான சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் உள்ளது.
    • தாய் வீட்டு திருமண சீர்வரிசை வழங்கும் விழா நடந்தது.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில 4-ம் படைவீடான சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் பங்குனி மாதத்தில் வள்ளிநாயகி திருமண நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி, 2-ம் ஆண்டாக நேற்று வள்ளி நாயகி, முருகப்பெருமான் திருமணம் நடைபெற்றது. முன்னதாக, குன்றக்குறவர் இன மேலப்பாடி வள்ளிநாயகிக்கும், குறவேடன் காவடி முருகப்பெருமானுக்கும் தாய் வீட்டு திருமண சீர்வரிசை குன்றக்குறவர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    குன்ற குறவர் வள்ளி நாயகிக்கு குன்ற குறவர் இனத்தாரின் தாய் வீட்டு சார்பில் 30 வகையான பழங்கள், சீர்வரிசை, பட்டுப்புடவை, வேஷ்டி, துண்டு ஆகியவற்றை மேளதாளங்கள் முழங்க, சிலம்பம் விளையாட்டு, வில் அம்புடன் வாணவேடிக்கையுடன் காவிரி ஆற்றங்கரையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலை வந்தடைந்தது.

    தொடர்ந்து, தாய் வீட்டு திருமண சீர்வரிசை வழங்கும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானமும், பூர்வீக உணவான தேனும், தினையும் வழங்கப்பட்டது.

    ×