search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா வாலிபர் பலி"

    • மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் என்பவர் ஒட்டிச் சென்று கொண்டிருந்தார்
    • அரசு சொகுசு பஸ் மீது பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை மார்க்கமாக அரசு சொகுசு பஸ்திண்டிவனம் பாதிரி ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கொல்கத்தா மாநிலத்திலிருந்து பல்வேறு கோவிலுக்கு ஆன்மீகம் பயணம் முடித்துவிட்டு கொல்கத்தா மாநிலத்தைச் சேர்ந்த மணிஷ் சுரேகா,நித்தின், பூனம், ரேகா,ஆகியோர் மதுரையில் இருந்து சென்னை ஏர்போர்ட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் என்பவர் ஒட்டிச் சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது எதிர்பாராத விதமாக காரானது அரசு சொகுசு பஸ் மீது பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் மணிஷ் சுரேகா,சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காரில் வந்தவர்கள் நான்கு பேர் சிறுகாயங்களுடன் மேல்மருவத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோ லஊத்தங்கரையில் இருந்து மேல்மருவத்தூருக்கு 30 பக்தர்களுடன்திண்டிவனம் அடுத்த ஓங்கூர் பாலம் அருகே வேன் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தஞ்சாவூரில் இருந்து மேல்மருவத்திற்கு அரசு பஸ் 40 பக்தர்களுடன் சென்று கொண்டிருந்தது.திடீரென எதிர்பாராமல் அரசு பேருந்தானது முன்னால் சென்ற வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் வேனில் பயணம் செய்த ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த 4 பேர் பலத்த காயங்களுடனும் 5-க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் மேல்மருவத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த இரு விபத்து குறித்தும் ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரு விபத்துகளால் சுமார் ஒரு மணி நேரம் திண்டிவனம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இந்த இரு விபத்திலும் கார், பஸ்கள் ,வேன் ஆகியவையில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதேபோல விழுப்புரம் மாவட்டம் நாட்டார்மங்கலம் பகுதியில் இருந்து திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கிராமத்திற்கு ஆட்டோவில் ஒலக்கூர் பகுதியை சேர்ந்த மல்லிகா மற்றும் அவரது உறவினர் ஆட்டோவில் 9.45 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர்.

    ஆட்டோவை நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்த ஏலன் என்பவர் ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தார் அப்பொழுது திண்டிவனம் அடுத்த சாரம் அருகே விழுப்புரம் அருகே ஓட்டேரி பாளையம் பகுதியில் இருந்து 60 பக்தர்கள் பஸ் சென்று கொண்டிருந்தது அப்பொழுது திடீரென முன்னாள் சென்ற ஆட்டோ மற்றும் லாரி மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேரும், பஸ்சில் பயணம் செய்த மருவத்தூர் பக்தர்கள் 12 பேரும் விபத்தில் காயம் அடைந்தனர்.மேலும் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தால் திண்டிவனம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதுகுறித்து வழக்குரு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.காயம் அடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ×