search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா பயணி பலி"

    • கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் முதலாவது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
    • சுற்றுலா வந்த இடத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து ராம் சுஷில் திவாரி பலியானது அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில்:

    மத்திய பிரதேச மாநிலம் கோந்தாரி பச்சோகர் பகுதியை சேர்ந்தவர் ராம் சுஷில் திவாரி (வயது 70). இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமார் 35 பேர் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர்.

    கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இவர்கள் நேற்று காலையில் சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் காட்சியை பார்த்து விட்டு மதுரைக்கு செல்வதற்காக தயாரானார்கள். இதையடுத்து கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.

    புனலூரில் இருந்து மதுரை செல்லும் ரெயிலுக்காக நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள முதலாவது பிளாட்பாரத்தில் காத்திருந்தனர். புனலூரில் இருந்து இரவு 10.50 மணிக்கு ரெயில் வரும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் முதலாவது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ரெயிலில் ராம் சுஷில் திவாரி கழிவறைக்கு செல்வதற்காக ஏறினார். கழிவறைக்கு சென்று விட்டு அவர் இறங்குவதற்குள் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இதையடுத்து அவர் ரெயிலில் இருந்து குதித்தார். அப்போது எதிர்பாராத விதமாக ராம் சுஷில் திவாரி ரெயில் தண்டவாளத்தில் தவறி விழுந்தார்.

    தவறி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த ராம் சுஷில் திவாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவருடன் வந்தவர்கள் அனைவரும் சோகத்துடன் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ளனர்.

    சுற்றுலா வந்த இடத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து ராம் சுஷில் திவாரி பலியானது அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விசாரணையில் இடிபாட்டில் சிக்கி இறந்த நபர் தஞ்சாவூர் விளார் பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் ஜெகதீசன் என்பதும் அவர் புதுவைக்கு வந்த சுற்றுலா பயணி என்பதும் தெரிந்தது.
    • மறைவான இடத்தில் சிறுநீர் கழிக்க ஒதுங்கிய போது சம்பவம் நடந்துள்ளது.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை கென்னடி நகருக்கு செல்லும் சுப்புராயப்பிள்ளை சத்திரம் சாலையில் அரசின் கால்நடை துறை அலுவலகம் உள்ளது.

    கால்நடை துறை அலுவலக கட்டிடத்தின் மதில்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் அந்த வழியாக சென்ற சுமார் 40 வயது மதிக்கதக்க நபர் சிக்கி கொண்டார்.

    அவரது கூச்சல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் வந்தனர். தகவல் அறிந்த தி.மு.க. பொறுப்பாளர் கோபால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தார். பொதுமக்கள் துணையோடு இடிபாட்டில் சிக்கியிருந்த நபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த உருளையன்பேட்டை போலீசார் விசாரித்தனர்.

    விசாரணையில் இடிபாட்டில் சிக்கி இறந்த நபர் தஞ்சாவூர் விளார் பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் ஜெகதீசன் (42) என்பதும் அவர் புதுவைக்கு வந்த சுற்றுலா பயணி என்பதும் தெரிந்தது. மேலும் மறைவான இடத்தில் சிறுநீர் கழிக்க ஒதுங்கிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

    கால்நடை துறை அலுவலக மதில் சுவர் மிகவும் மோசமாக உள்ளது என்றும், விபத்து ஏற்படுவதற்கு முன் அதனை உடனடியாக இடிக்க வேண்டும் என்றும் கென்னடி நகர் தி.மு.க. நிர்வாகிகள் துறை இயக்குநரிடம் ஒரு மாதத்திற்கு முன்பு மனு அளித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் அலட்சியத்தால் ஒரு உயிர் பலியாகி உள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறினர்.

    இடிபாட்டில் சிக்கியவரை உருளையான்பேட்டை தி.மு.க. பொறுப்பாளர் கோபால் தலைமையில் தி.மு.க.வினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய பின் கட்டிடம் இடிந்த இடத்தை பார்வையிட்டனர்.

    • யானை தந்தத்தால் அக்பர்அலியின் நெற்றியில் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
    • உடுமலை-மூணாறு சாலையில் இரவு நேரம் யானைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும்

    உடுமலை:

    புதுக்கோட்டையை சேர்ந்த அக்பர்அலி என்பவர் உள்பட 3 பேர் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா சென்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக அவர்கள் காரில் சென்றனர்.

    நேற்றிரவு உடுமலை வனத்துறைக்குட்பட்ட சின்னார் பகுதியில் செல்லும்போது திடீரென யானை ஒன்று சாலையின் நடுவே வந்து நின்றது. இதைப்பார்த்து பயந்துபோன 3 பேரும் காரில் இருந்து இறங்கி ஓடினர். இதில் அக்பர்அலி யானையின் பிடியில் சிக்கிக்கொண்டார். அப்போது யானை தந்தத்தால் அக்பர்அலியின் நெற்றியில் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் உடுமலை மற்றும் கேரள மாநில வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அக்பர்அலி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை-மூணாறு சாலையில் இரவு நேரம் யானைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் , யானைகளை துன்புறுத்தக்கூடாது என்று வனத்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.

    இந்தநிலையில் யானை தாக்கி சுற்றுலா பயணி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×