search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீனி அவரைக்காய்"

    • நாட்டு மருத்துவ குணம் கொண்ட சீனிஅவரைக்காய் மற்றும் வெண்டைக்காய் பயிரி ட்டுள்ள விவசாயிகள் பெரும்பாலான காலங்களில் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர்.
    • போதிய விலையில்லாமல் காய்கறிகளை விற்க மனமின்றி ெசடியி லேயே பறிக்காமல் விட்டு உள்ளனர்.இதன் காரணமாக காய்கறிகள் செடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே சிலமலை கிரா மத்தில் மொச்சை, அவரை, பச்சைமிளகாய், கத்தரி க்காய், வெண்டைக்காய், சீனி அவரைக்காய், தக்காளி உள்ளிட்ட குறுகிய கால நாட்டுரக காய்கறிகளை விவசாயிகள் அதிகம் பயிரிட்டு வருகின்றனர்.

    தற்போது இங்கு சீனி அவரைக்காய் மற்றும் வெண்டைக்காய் விளை ச்சல் அதிகமாக இருந்த போதும் கொள்முதல் செய்ய வியாபாரிகள் குறைந்த அளவே வருகின்றனர். நாட்டு மருத்துவ குணம் கொண்ட சீனிஅவரைக்காய் மற்றும் வெண்டைக்காய் பயிரி ட்டுள்ள விவசாயிகள் பெரும்பாலான காலங்களில் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர்.

    ஒரு சிலர் இதனை வாங்கி வற்றலாக தயாரித்து அதனை கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது விளைச்சல் அதிகமாக இருந்தபோதும் கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரையிலேயே வியாபாரிகள் வாங்க முன்வருகின்றனர். இதனால் விவசாயிகள் காய்கறிகளை விற்க மனமின்றி ெசடியி லேயே பறிக்காமல் விட்டு ள்ளனர்.

    இதன்காரணமாக காய்கறிகள் செடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டு ள்ளது. மற்ற காய்கறிகளுக்கு ஓரளவு விலை கிடைத்தாலும் சீனி அவரை, வெண்டை க்காய் பயிரிட்ட விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருவ தாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    ×