search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி தற்கொலை முயற்சி"

    • சிறுமியும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கூலி தொழிலாளி கோகுலகிருஷ்ணன் என்பவரும் காதலித்து வந்து உள்ளனர்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய கோகுலகிருஷ்ணனை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் தான் விஷம் குடித்த விவரத்தை அவரது தாயாரிடம் தெரிவித்தார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிறுமிக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து டாக்டர்கள் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் சிறுமியும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கூலி தொழிலாளி கோகுலகிருஷ்ணன் (22) என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்து உள்ளனர்.

    அப்போது கோகுலகிருஷ்ணன் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் சிறுமியை அழைத்து சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி 7 மாதம் கர்ப்பம் அடைந்துள்ளார். இது ஆரம்பத்தில் சிறுமிக்கு தெரியவில்லை. நாளடைவில் தெரிய வந்ததும் சிறுமி பயத்தில் இருந்து வந்துள்ளார்.

    இதனால் சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வடவள்ளி போலீசார் பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய கோகுலகிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
    • அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுமி யாரிடமும் சரியாக பேசாமல் தனக்கு ஏற்பட்ட நிலையை கருதி அமைதியாக இருந்து வந்தார்.

    ஈரோடு:

    ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் வலுக்கட்டாயமாக கருமுட்டை எடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை மற்றும் பெண் புரோக்கர் மாலதி, போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சிறுமியிடம் கருமுட்டை எடுத்தது தொடர்பாக உயர்மட்ட மருத்துவ குழுவினர் மற்றும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் மற்றும் திருப்பதி, திருவனந்தபுரம் பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகிகள் மற்றும் டாக்டர்களிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் பெண் புரோக்கர் மாலதியை போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது வளர்ப்பு தந்தை மூலம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பல்வேறு ஆஸ்பத்திரிகளிலும் இவருக்கு வலுக்கட்டாயமாக கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுமி மன உளைச்சலில் இருந்து வந்தார். யாரிடமும் சரியாக பேசாமல் தனக்கு ஏற்பட்ட நிலையை கருதி அமைதியாக இருந்து வந்தார்.

    இந்நிலையில் பெற்ற தாயே தனது வாழ்க்கையை சீரழித்ததால் மனம் உடைந்த சிறுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி இன்று காலை சிறுமி கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் அமிலத்தை (விஷம்) குடித்து மயங்கினார்.

    இதுபற்றி தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்த காப்பக நிர்வாகிகள் சிறுமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×