search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறு வயதிலேயே பெற்றோர்கள் இறந்துவிட்டனர்."

    • கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என பாட்டி கூறியதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த காற்றம் பாக்கம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன் மகள் கவியரசி (வயது 20). இவரது சிறு வயதிலேயே பெற்றோர்கள் இறந்துவிட்டனர்.

    கவியரசிக்கு அண்ணன் ஒருவர் இருக்கி றார். அவர் ராணுவத்தில் வேலை செய்கிறார். இதனால் கவியரசி பாட்டி வள்ளியம்மாள் வீட்டிலேயே வளர்ந்து வந்தார். மேலும் சோளிங்கர் அருகே உள்ள தனியார் கல்லூ ரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கவியரசியை கல்லூரிக்கு செல்லவேண் டாம், வீட்டில் இருந்து படி என்று அவரது பாட்டி கூறியதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த கவியரசி நேற்று முன் தினம் காலை 11 மணிக்கு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டுள்ளார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ராணிப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த னர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்து விட்டார்.

    இதுகுறித்து கவியரசியின் சித்தப்பா நடராஜன், கொண்ட பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×