search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு அழைப்பாளர்"

    • செஞ்சியில் உழவர் நண்பர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
    • முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் மூலம் நிகழ்ச்சிக்கு வேளாண்மை அலுவலர் தீபிகா முன்னிலை வகித்து அட்மா திட்டத்தின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் கலந்துகொண்டு உழவர் நண்பர்கள் குழு செயல்பாடுகள் குறித்தும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் அட்மா திட்ட தலைவர் வாசு ஊராட்சி தலைவர் குமார் உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜெயஸ்ரீ, ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதில் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    ×