search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராய பாக்கெட்டு"

    • விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷசாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.
    • கெங்கவல்லி அருகே வீரகனூர் ஏரிக்கரையில் அதிகாலை முதலே கள்ளச்சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆத்தூர்:

    விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷசாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக போலீசார் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்து தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில், சேலம் மாவட்டம் கல்வராயன் மலைத்தொடர் பகுதிகளில் சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து லாரி டியூப்கள் மூலம் கடத்தி வரப்பட்டு ஆத்தூர் மற்றும் தலைவாசல் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருவதாக போலீசாரிடம் வீடியோ ஆதாரங்களுடன் பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் அதனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கெங்கவல்லி அருகே வீரகனூர் ஏரிக்கரையில் அதிகாலை முதலே கள்ளச்சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சாராய பாக்கெட்டுகளை வாங்க அதிகாலை முதலே குடிமகன்கள் குவிகின்றனர். இதனால் இப்பகுதியில் சாராய விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

    சாராய விற்பனை குறித்து, மக்கள் சட்டம், ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தும், போலீசார் சாராய கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு கல்லாகட்டுவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    மேலும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறை உயர் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாராய விற்பனையை தடுத்து, சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

    இதனிடையே கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஆத்தூர் காவல் உட்கோட்ட த்திற்கு உட்பட்ட கல்வராயன் மலை அடிவாரப் பகுதியில் தற்காலிக சோதனை சாவடி மற்றும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×