search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதுரங்க ஒலிம்பியாட் போட்டி"

    • கரூர் ரயில் நிலைய சந்திப்பு (ஜங்ஷன்) முன்பிருந்து இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தொடங்கி வைத்து கலந்து கொண்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றார்.
    • பேரணி கரூர் ரயில் நிலைய சந்திப்பில் தொடங்கி, சர்ச், திண்ணாப்பா முனைகள், பேருந்து நிலையம் வழியாக திருவள்ளுவர் மைதானம் சென்றடைந்தது.

    கரூர் :

    மாமல்லபுரத்தில் 44 சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக கரூர் ரயில் நிலைய சந்திப்பு (ஜங்ஷன்) முன்பிருந்து இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தொடங்கி வைத்து கலந்து கொண்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றார்.

    பேரணி கரூர் ரயில் நிலைய சந்திப்பில் தொடங்கி, சர்ச், திண்ணாப்பா முனைகள், பேருந்து நிலையம் வழியாக திருவள்ளுவர் மைதானம் சென்றடைந்தது.

    முன்னதாக, முதல்வர் பங்கேற்ற சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு குறும்படத்தை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன எல்ஈடி வாகனத்தில் ஒளிபரப்பட்டதை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், சமுக பாதுகாப்புத்திட்ட தனித்துனை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்பிரமணியன், கரூர் வட்டாட்சியர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனார்.

    ×