search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சக மாணவன்"

    மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மாணவன் நேரடியாக மாண வியின் வீட்டிற்கு வந்து மாணவியை கடத்திச் சென்றுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி பனங்காட்டு தெருவை சேர்ந்த மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் -2 படித்து வருகி றார். இந்நிலையில் நேற்று மாணவி வீட்டில் தனி யாக இருந்துள்ளார். இதை அறிந்த மாணவியுடன் படிக்கும் விழுப்புரம் கூனிமேடு பகுதியைச் சேர்ந்த சக மாணவன் பால முருகன் நேரடியாக மாண வியின் வீட்டிற்கு வந்து மாணவியை கடத்திச் சென்றுள்ளார்.

    இதனை அடுத்து வீட்டிற்கு வந்த மாண வியின் பெற்றோர் வீட்டில் மாணவி கடத்திச் செல்ல ப்பட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே மாணவியின் தந்தை இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்த குமார் வழக்கு பதிவு செய்து மாணவி மற்றும் மாணவியை வீடு புகுந்து கடத்திச் சென்ற பாலமுரு கனை வலை வீசி தேடி வருகின்றனர். 

    ×