search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடிநாள் நிதி"

    • முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் நேற்று முப்படைவீரர் கொடி நாள் விழா நடைபெற்றது.
    • இவ் விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மேனகா கொடிநாள் உண்டியலில் நிதியளித்து உண்டியல் வசூலைத் தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் நேற்று முப்படைவீரர் கொடி நாள் விழா நடைபெற்றது. இவ் விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மேனகா கொடிநாள் உண்டியலில் நிதியளித்து உண்டியல் வசூலைத் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது:-

    முப்படை வீரர்களின் மகத்தான சேவையினை நினைவு கூறும் வகையில் 1947-ம் ஆண்டு முதல் முப்படையினர் கொடிநாள் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் நாள் அனுசரிக்கப்படுகிறது. கொடி நாளுக்காக திரட்டப்ப டும் நிதி போர், போரையொத்த நடவடிக்கைகளில் உயிர் நீத்த, போரில் ஊனமுற்றோரின் மறுவாழ்வுக்கும் மற்றும் புனரமைப்புகாகவும், ராணுவத்தினர் மற்றும் அவர்தம் குடும்பத்தாரின் நலத் திட்டங்களுக்காகவும், முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர் குடும்பங்களின் புனரமைப்புக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

    அந்தவகையில், சேலம் மாவட்டத்திற்கு சென்ற ஆண்டு கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூ.1,99,03,000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட நிர்வா கத்தின் சீரிய முயற்சியால் மேற்படி இலக்கில் 99 சதவிகிதம் வசூல் செய்யப்பட்டு மொத்தம் ரூ.1,96,18,000 வசூல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம் மாநகராட்சிக்கான இலக்கு ரூ.13,47,000 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் இலக்கைத் தாண்டி ரூ.13,92,00 வசூலிக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூ.2,10,24,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே முன்னாள் படைவீரர்கள் குடும்பங்களின் நலனுக்காக கொடிநாள் வசூலினை அனை வரும் அதிக அளவில் வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து, முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் திருமண நிதியுதவி, கண் கண்ணாடி மானியம், கல்வி உதவித்தொகை என மொத்தம் சார்பில் 11 முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.1.72 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

    இந்நிகழ்வின்போது முன்னாள் படைவீரர் நலத்து றையின் துணை இயக்குநர் லெப்டினட் கர்னல் ஆர்.பி.வேலு மற்றும் முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    ×