search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடிகம்பம்"

    • அனுமதியின்றி வைத்தால் அகற்ற நடவடிக்கை
    • தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கொடி கம்பங்களில் கொடியேற்றப்படும்

    நாகர்கோவில், நவ.1-சென்னையில் அண்ணாமலை தங்கி இருந்த வீட்டில் நடப்பட்டு இருந்த பா.ஜ.க. கொடிக்கம்பத்தை போலீசார் அகற்றியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 100 நாட்களில் 10 ஆயிரம் வீடுகளில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் கொடி கம்பம் நட்டு கொடி ஏற்றுவார்கள் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார்.

    அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று முதல் பா.ஜ.க. கொடி கம்பங்கள் நடப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்திலும் பாரதிய ஜனதா நிர்வாகிகள், வீடுகளில் பாரதிய ஜனதா கொடி ஏற்றுவதற்கு தயாராகி வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடுகளில் கொடி ஏற்ற தயாராகி வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் கொடியேற்றுவதாக அறிவித்ததை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்- டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணி பலப்படுத்தப்பட்டு உள்ளது. எந்த ஒரு அனுமதியும் இன்றி கொடிக்கம்பங்கள் வைத்தால் அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக பாரதியஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் கூறுகையில், தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கொடி கம்பங்களில் கொடியேற்றப்படும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். ஆனால் குமரி மாவட்டத்தில் மட்டுமே 100 நாட்களில் பத்தாயிரம் இடங்களில் கொடியேற்ற திட்டமிட்டு உள்ளோம் என்றார்.

    • உளுந்தூர்பேட்டை யூனியன் குழு தலைவருமான ராஜவேல் உற்சாக வரவேற்பு அளித்தார்.
    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் கும்பம் எடுத்து வந்து வரவேற்பு அளித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் இளைஞர்கள் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருக்கு தொகுதி எல்லை யான எலவனாசூர் கோட்டையில் உளுந்தூர் பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், உளுந்தூர்பேட்டை யூனியன் குழு தலைவருமான ராஜவேல் உற்சாக வரவேற்பு அளித்தார்.

    அதனைத் தொடர்ந்து 100 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றினார்.

    நிகழ்ச்சியில் உளுந்தூர் பேட்டை எம்.எல்.ஏ. மணிக்கண்ணன், சங்கராபுரம் எம்.எல்.ஏ.வும், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செய லாளருமான உதயசூரியன், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.வும், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாள ருமான வசந்தம் கார்த்தி கேயன், உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான வைத்தியநாதன், உளுந்தூ ர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர்கள் ஜி.ஆர். வசந்தவேல், கே.வி.முருகன், சந்திரசேகரன், நகர தி.மு.க. செயலாளர் டேனியல் ராஜ், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆசிர்வாதம், செல்லையா, தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், விடாகம் ஊராட்சி மன்ற தலைவர் நந்தகுமார், துணைத் தலைவர் ஷம்சாத், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண் ராஜ், துணைச் சேர்மன்கள் இளங்கோவன் ராமலிங்கம், நகர மன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி சரவணன், இளைஞர் அணி குரு ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் கும்பம் எடுத்து வந்து வரவேற்பு அளித்தனர்.

    திருவெண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான சந்திரசேகரன் தலைமையில் ஒன்றிய அவைத்தலைவர் கலியவரதன், ஒன்றிய பொருளாளர் மைக்கேல், ஒன்றிய துணைச் செயலாளர்கள் வீராசாமி, பிரபாவதி தாமோதரன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜேஷ் கண்ணா, தில்லை இளவழுதி, புத்தர், ஒன்றிய துணைச் செயலாளர் சின்னப்பராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜா, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் சுப்பிரமணியன், மாவட்ட தொண்டர் படை அமைப்பாளர் ரவி பிரபாகரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணைத் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் மைக்கேல், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் சக்திவேல், காசிராஜன் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பிரேம், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் ஏழுமலை, மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் பாரதி ஜெயபால் உள்பட திருவண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் ஆயிரம் பேர் கலந்து ெகாண்டு அைமச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்றனர்.

    ×