search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதி கைது"

    • பத்மேஸ்வரன் தப்பி சென்ற சம்பவத்தில் அஜித் என்பவர் அவருக்கு உதவியாக இருந்தது தெரிய வந்தது. இவர் மீதும் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய பத்மேஸ்வரனை அஜித் என்பவர்தான் மோட்டார் சைக்கிளில் வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துமாரியப்பன். இவரது மகன் பத்மேஸ்வரன் (வயது 24). இவர் கடந்த மார்ச் மாதம் மூக்கையூர் கடற்கரையில் காதலனுடன் வந்த 21 வயது இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் அவரது 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு மதுரை பனகல் ரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 17-ந் தேதி பத்மேஸ்வரன், போலீசாரை ஏமாற்றி தப்பி சென்று விட்டார். பின்னர் பத்மேஸ்வரன் தப்பிச்செல்லும் வீடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து தப்பி சென்ற பத்மேஸ்வரனை பிடிப்பதற்காக தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார், மதிச்சியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேலும் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசாரும் தப்பிய கைதியை தேடி வந்தனர். அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது பத்மேஸ்வரன் தப்பி சென்ற சம்பவத்தில் அஜித் என்பவர் அவருக்கு உதவியாக இருந்தது தெரிய வந்தது. இவர் மீதும் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய பத்மேஸ்வரனை அஜித் என்பவர்தான் மோட்டார் சைக்கிளில் வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அஜித்தின் செல்போன் அழைப்புகளை கண்காணித்து வந்தனர். அப்போது பத்மேஸ்வரன் மேலூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவு மேலூருக்கு விரைந்து சென்றனர்.

    அங்குள்ள ஒரு வீட்டில் பத்மேஸ்வரன், தனது கூட்டாளி அஜித்துடன் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து பிடிபட்ட 2 பேரிடமும் தனிப்படை போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையின்போது பத்மேஸ்வரன் கூறியதாவது:-

    எனக்கு ஜெயிலில் இருக்க பிடிக்கவில்லை. எனவே தப்பிச் செல்ல முடிவு செய்தேன். இதனை தொடர்ந்து ஜெயிலில் என்னை பார்க்க வந்த உறவினர் ஒருவரிடம் நான், ஜெயிலில் இருந்து தப்பி செல்வது தொடர்பாக ஆலோசனை கேட்டேன்.

    அப்போது அவர் 'மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச் செல்வதுதான் பாதுகாப்பானது' என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஜெயில் அதிகாரிகளிடம் எனக்கு 2 கால்களும் வலிக்கின்றன' என்று தெரிவித்தேன். எனவே அவர்கள் என்னை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பி சென்று விட்டேன்.

    ×