search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேள்வித்தாள் சர்ச்சை"

    • கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட 22 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படவில்லை
    • விளக்கத்தின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதிகாரி தகவல்

    வேலூர்:

    வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழக பருவத் தேர்வில் 2021-ல் வெளியான கேள்வித்தாளே, தற் போது நடைபெற்று வரும் பருவத் தேர்வில் மீண்டும் விநியோகிக் கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர், ராணி ப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணா மலை மாவ ட்டங்களில் செயல்படும் 70-க் கும் மேற்பட்ட கல்லூரிகள் திரு வள்ளுவர் பல்கைலக்கழக கட்டுப் பாட்டில் உள்ளன. இவற்றில் சுமார் 2.50 லட்சம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    பல்கலையில் தற்போது பருவத் தேர்வுகள் நடைபெற்று வரும் கேள்வி த்தாள் வடிவமைப்புக் குழு அமைத்து, அவர்களுக்கு பணம் வழங்க வேண்டும்? இந்த நிலையில், முதுநிலை கணிதவி யல் 3-வது பருவத் தேர்வில் கடந்த 2021-ம் ஆண்டின் கேள்வித்தாள் அப்படியே மீண்டும் விநியோகிக்கப் பட்டுள்ளது. TOPOLOGY, DIFFERENTIAL GEOMETRY, COMPLEX ANALYSIS-1 ஆகிய தேர்வுகளில், பழைய மூன்று தேர்வுகளில், கேள்வித்தாளே மீண்டும் விநி யோகிக்கப்பட்டது மாணவர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்களி டையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    தேர்வு துறை, சரியான முறையில் செயல்படு வதில்லை. கேள்வித் தாள் வடிவமைப்புக் குழுவிடம் பெறப்படும் கேள்வித் தாள் களை, சரிபார்ப்புக் குழு ஆய்வு செய்ததா என்றும் தெரியவில்லை. மேலும், கேள்வித்தாள் வடிவமைப் புக் குழுவுக்கு சரியான நேரத்துக்கு பணம் வழங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது".

    திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்விக் குழுவில் கடந்த 2 ஆண்டு களாக கல்லூரி ஆசிரிய ர்கள், கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட 22 பேர் உறுப்பினர்களாக நிய மனம் செய்யப்படவில்லை.

    இதனால், பல்கலைக்கு உரிய அறிவுரை வழங்க முடியவில்லை. எங்கள் பங்களிப்பு இல்லாமல், பல்கலைக்கழக பாடத் திட்டங்களையும் விட்டனர் எனக் கூறியுள்ளார்.

    பல்கலை. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பாபு ஜனார் தனம் கூறும்போது:-

    "பழைய கேள்வித்தாள் வெளியானது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேராசிரி யரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும்" என்றார்.

    ×