search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள வியாபாரி"

    கோவை அருகே கேரள வியாபாரியை கத்திமுனையில் மிரட்டி ரூ.1½ லட்சம் கொள்ளையடித்த கும்பல் அவரது காரையும் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.
    கோவை:

    ராஜஸ்தானை சேர்ந்தவர் கான்சிங்(வயது 32). இவர் கேரள மாநிலம் திருச்சூரில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    இவர் பொருட்கள் வாங்குவதற்காக நேற்று இரவு கோவைக்கு காரில் புறப்பட்டார். இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கார் மதுக்கரை மரப்பாலம் சாலையில் வந்த போது மற்றொரு காரில் வந்த 4 பேர் கும்பல் இவரது காரை மறித்தனர்.

    அந்த கும்பல் கத்தியை காட்டி கான்சிங்கை மிரட்டினர். அவரிடம் இருந்த ரூ.1½ லட்சம் ரொக்கப்பணம், செல்போன் ஆகியவற்றை பறித்த மர்மநபர்கள் கான்சிங்கை கீழே தள்ளி விட்டு அவரது காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த கான்சிங், அவ்வழியாக வந்த வாகனத்தில் ஏறி மதுக்கரை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். உடனடியாக போலீசார் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு கார் நம்பரை கூறி அனைத்து போலீஸ் நிலையங்களையும் உஷார்படுத்தினர்.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. எனினும் சந்தேகத்திற்கிடமாக யாரும் சிக்கவில்லை.இது குறித்து கான்சிங் கொடுத்த புகாரின்பேரில் மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×