என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கேரள மாடல் அழகிகள்"
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் மாடல் அழகி அன்சி கபீர் (வயது 23).இவரும் இவரது தோழியும் மாடல் அழகியான ஆயுர்வேத டாக்டர் அன்ஜனா சாஜன் (26) ஆகியோர் மேலும் 2 பேருடன் கடந்த 1-ந்தேதி நள்ளிரவில் கொச்சி அருகே காரில் சென்றனர்.
அப்போது மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென குறுக்கே புகுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்த விபத்து குறித்து கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. விபத்து நடந்த பகுதியில் உள்ள ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை அழித்ததாக தனியார் ஓட்டல் அதிபர் மற்றும் ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் விபத்து நடந்த நேரத்தில் மாடல் அழகிகளின் காரை பின்தொடர்ந்து சொகுசு காரில் துரத்தி சென்றதாக டிரைவர் சாஜித் என்பவரை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர் கடந்த சில நாட்களாக போலீஸ் விசாரணைக்கு பயந்து தலைமறைவாக இருந்தார்.
நேற்று கொச்சி குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று அவர் போலீசார் முன்பு ஆஜர் ஆனார். அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் உள்நோக்கத்துடன் அழகிகளின் காரை துரத்திச் சென்றதாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் அவரை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளது.இதில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது என்று கூறினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் அன்சி கபீர். இவரது தோழி அஞ்சனா சாஜன்.
மாடல் அழகிகளான அன்சி கபீரும், அஞ்சனா சாஜனும் மிஸ் கேரளா அழகி போட்டியில் பங்கேற்று முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள் ஆவர்.
இவர்கள் இருவரும் கடந்த வாரம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த விருந்தில் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் அன்சி கபீர், அஞ்சனா சாஜன் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து எர்ணாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே மாடல் அழகிகள் அன்சி கபீர், அஞ்சனா சாஜன் சாவில் மர்மம் இருப்பதாகவும், விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் புகார்கள் கிளம்பின.
மேலும் எர்ணாகுளத்தில் விருந்து நடந்த ஓட்டலில் மாடல் அழகிகள் அன்சி கபீர், அஞ்சனா சாஜனுடன் சிலர் தகராறு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக எர்ணாகுளம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். மேலும் அன்சி கபீர், அஞ்சனா சாஜன் இருவரும் விருந்தில் பங்கேற்ற ஓட்டலுக்கும் சென்று அங்கிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அந்த ஓட்டலின் உரிமையாளரிடமும் விசாரணை நடத்தினர். சுமார் 7 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. இதுபற்றி எர்ணாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் கூறும்போது, ஓட்டல் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினோம், அங்கிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்தோம். அதில் சந்தேகத்திற்கிடமான காட்சிகள் எதுவும் இல்லை, என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்