search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் போலீஸ் பாதுகாப்பு"

    • அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் :

    ராணுவத்தில் இளைஞர்களை பணியமர்த்துவதற்கு அக்னிபத் என புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இதற்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. வடமாநிலங்களில் ரெயில் எரிப்பு போராட்டங்கள் நடைபெற்றது.

    இதனால் 12 ரெயில்கள் எரிக்கப்பட்டு பல கோடி நஷ்டம் ஏற்பட்டது. மேலும் போராட்டங்கள் தென்மாநிலங்களுக்கும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை உள்ளிட்ட  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×