search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளோரின்"

    • மருத்துவ குழு அவ்வப்போது ஆய்வு செய்து, முடிவுகளை மாநகராட்சிக்கு தெரிவிப்பது வழக்கம்.
    • அய்யனார் தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து காரசாரமாக பேசினார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு கேப்பர் மலை மற்றும் திருவந்தி புரம் பகுதியிலிருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கி ருந்து கடலூர் மாநகர மக்களுக்கு குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தரமாக உள்ளதா? என்பதனை மருத்துவ குழு அவ்வப்போது ஆய்வு செய்து, முடிவுகளை மாநகராட்சிக்கு தெரிவிப்பது வழக்கம்.

    அதன்படி இன்று காலை 4 பேர் கொண்ட மருத்துவ குழு திருவந்திபுரம் மலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். குடிநீர் தரமாக வழங்கப்படுகிறதா? குளோரின் சரியான முறையில் கலக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறதா? உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு இருந்தனர்.

    அப்போது அவ்வழியாக சென்ற ஒன்றிய குழு துணை தலைவர் அய்யனார், மருத்துவ குழுவினரிடம் சென்று இந்த ஊராட்சி பகுதியில் சரியான சாலை வசதி இல்லை. எங்கள் பகுதியில் குடிநீர் கலங்கலாக வருகின்றது. இது தொடர்பாக நீங்கள் ஏன் ஆய்வு செய்ய வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர்கள் வந்த வாகனத்தை வழி மறைத்து தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து காரசாரமாக பேசினார். சிறிது நேரம் பேசிவிட்டு ஒன்றியகுழு துணைத் தலைவர் அய்யனார் அங்கி ருந்து சென்றுவிட்டார். இதையடுத்து மருத்துவக் குழு வினர் தங்களின் பணிகளை நிறைவு செய்து அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ×