search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைநீர் கூட்டம்"

    • நிர்வாக காரணங்களால் இக்கூட்டம் நடைபெறும் நாள் மாற்றப்பட்டுள்ளது.
    • கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலை வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வருகின்ற 24-ந் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். நிர்வாக காரணங்களால் இக்கூட்டம் நடைபெறும் நாள் மாற்றப்பட்டுள்ளது. இந்தகூட்டம் வருகிற 29-ந்தேதி கலெக்டர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெறும்.

    கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலை வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக சம்பா பருவத்துக்கான பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 22-ந் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×