search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா பொருட்கள் கடத்தல்"

    • குட்காவை கடத்தி செல்லும் வாகனங்களை தொடர்ந்து மடக்கி பிடித்து வருகின்றனர்.
    • சந்தேகத்திற்கு இடமாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டத்தில் பெங்களூரு- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சட்ட விரோதமாக கடத்தி செல்லும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

    இவற்றை கட்டுப்படுத்தும் வகையில் தருமபுரி எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி. மேற்பார்வையில் தொடர் சோதனைகள்‌ மூலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யபடுகின்றன.

    தருமபுரி மாவட்டத்தில் மற்ற காவல் நிலைய எல்லைகளை சாதா ரணமாக கடந்து வந்து விட்டாலும் தொப்பூர் காவல்துறையினரின் தொடர் கண்காணிப்பினால் மாவட்டத்தில் எந்த பகுதியிலும் இல்லாத அளவில் குட்காவை கடத்தி செல்லும் வாகனங்களை தொடர்ந்து மடக்கி பிடித்து வருகின்றனர்.

    இதேபோல் நேற்று இரவு 8 மணி அளவில் தொப்பூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், அருள், சம்பத்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் தொப்பூர் கணவாய் அருகே கட்டமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தை திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 26) என்பவர் ஓட்டிவந்துள்ளார். காவல்துறையினர் வாகனத்தை சோதனை செய்த பொழுது ஓட்டுனர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததோடு, தான் சேலம் மார்க்கெட்டில் தக்காளிலோடு ஏற்ற செல்கிறேன் என பதில் அளித்துள்ளார். அதற்கு ஆதாரமாக வாகனத்தின் உள்ளே உடைந்த தக்காளி கூடைகளை அடுக்கி வைத்து வந்துள்ளார். தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் வாகனத்தை முழுமையாக சோதனை செய்தபோது கண்டைனர் உள்ளே ரகசிய அறை அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    அதனை திறந்து பார்த்த பொழுது 51 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. கடத்திவரப்பட்ட குட்கா பொருட்கள் சுமார் 326 கிலோ எடைகொண்ட 3 லட்சம் மதிப்புடையது. அதனை அடுத்து வாகனத்தின் ஓட்டுனரை விசாரணை செய்ததில் பெங்களூருவில் இருந்து கும்பகோணத்திற்கு தருமபுரி வழியாக கடத்தி சென்றது தெரியவந்தது. அதன் பின்னர் ஓட்டுனரை கைது செய்து வாகனம் மற்றும் குட்காவை பறிமுதல் செய்துள்ளனர்.

    • கார், 35 கிலோ போதைபொருள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே 35 கிலோ குட்கா பொருட்களை காரில் கடத்தி சென்ற கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, சாராயம் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் அவரது உத்தரவின் பேரில் இன்று திருவண்ணாமலை அருகில் உள்ள மேல்பாலானந்தல் பகுதியில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நசுரூதின் மற்றும் ஏட்டுகள் சின்னதுரை, மாசிலாமணி, பலராமன், முதல்நிலை காவலர் மோகன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமடக்கி போலீசார் சோதனை நடத்தினர். காரில் சோமாசிபாடியை சேர்ந்த ஜான்பாஷா (வயது 37) மற்றும் அவரது மனைவி ஹஜீரா (35) ஆகியோர் இருந்தனர்.

    மேலும் சோதனை நடத்திய காரில் சுமார் 35 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும். இதையடுத்து அவர்களை போலீசார் மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் குட்கா பொருட்களை கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக காரில் கடத்தி சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர்.

    மேலும் கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி பறிமுதல்-டிரைவர் உட்பட 2 பேர் கைது.
    • குட்கா பொருட்கள் 62 சாக்கு பைகளில் மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் நேற்று மாலை, பூனப்பள்ளி செக்போஸ்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.8 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள 1,639 கிலோ குட்கா பொருட்கள் 62 சாக்கு பைகளில் மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் விசாரணையில் , அவற்றை பெங்களூரி லிருந்து சேலத்திற்கு விற்பனைக்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார், குட்கா பொருட்களை ரூ.16 லட்சம் வாகனத்துடன் பறிமுதல் செய்து, டிரைவர் மணி மற்றும் உரிமையாளர் மதன்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

    ×