search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் பணி"

    • புதிய பைப் லைன் அமைக்கப்பட்டது
    • ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

    இம்மலையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். ஏலகிரி மலை ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட நிலாவூர் கிராமம் மோட்டு காடு வட்டத்தில் வசித்து வரும் குடும்பங்கள் குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் புதிய பைப் லைன் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் ராஜ ஸ்ரீ கிரிவேலன் தொடங்கி வைத்தார்.

    அப்போது ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில் குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×