search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் திட்ட பணி"

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் உத்தரவு
    • பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் பணி கள் குறித்து, உயர்மட்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக் டர் அரவிந்த் தலைமை யில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

    இதில் வருவாய்த்துறை, பொதுப்ப ணித்துறை (கட்டடம், நீர்வளம்), ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், மாநகராட்சி, நகராட் சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், வேளாண் மைத்துறை, தோட்டக்க லைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மின்சா ரத்துறை, மீன்வளத்துறை, போக்குவரத்துத்துறை, காவல் துறை, கூட்டுறவுத் துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில் நடை பெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் முன்னேற் றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஒவ்வொரு துறையிலும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

    பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, கட்டடம், கடலரிப்பு தடுப் புக்கோட்டம், நெடுஞ் சாலை ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சி திட் டப்பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது. வளர்ச்சி பணிகளின் செயலாக்கத் தின் போது ஏற்படும் தடை களுக்கு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட் டது. குடிநீர், சாலை வச திகள், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட அத்தி யாவசிய வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக் டர் கூறினார். மாவட்டத் திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் ஏதேனும் தடைகள் மற்றும் இடர் பாடுகள் இருந்தால் அது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப் பிரியா, மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், திட்ட இயக் குநர்கள் ச.சா.தன பதி (ஊரக வளர்ச்சி முகமை), மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ (மக ளிர் திட்டம்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) திருப்பதி உட்பட அனைத் துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×