search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிசைத்தொழில்"

    • குடிசைத்தொழில் மூலம் முதுநிலை பட்டதாரி வாலிபர் செயற்கை விறகு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
    • சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்தவர் ராஜேஷ். எம்.இ., எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் பள்ளியில் படிக்கும் பொழுதே பின்தங்கிய சிவ கங்கை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் துவங்க வேண்டும் என்று விரும்பி னார். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் சிறு தொழில் துவங்கி இளைஞர்க ளுக்கு வேலைவாய்ப்பு தரவேண்டும் என்று திட்ட மிட்டார். இதற் காக கொல்லங்குடி அழகாபுரி அருகே உள்ள மோர்குழி கிராமத்தை தேர்வு செய்தார்.

    பின்பு தொழில் நிறுவனங்கள், வல்லுனர்களுடன் ஆலோ சித்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஏராளமாக வளர்ந்து பயனற்ற நிலை யில் உள்ள வேலிக்கருவை மரங்களை செயற்கை விற காக தயாரிக்கும் முயற்சியில் இறங்கி மாவட்ட தொழில் மையத்தை நாடினார். அபா் போதைய கலெக்டர் ஜெய காந்தன் மூலம் மின்கட்டண சலுகை, மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற்றார்.

    அதனைக்கொண்டு 2 கொதிகலன் எந்திரங்களை வாங்கினார். இந்த செயற்கை விறகானது கருவேல மரம், முந்திரி, கடலை, நெல்பதர் ஆகியவற்றை நன்றாக தூளாக்கி தயாரிக்கப்படுகிறது. எந்த ரசாயன கலவையும் சேர்ப்பதில்லை. இதனால் இந்த செயற்கை விறகை பயன்படுத்துவதால் எத்த கைய உடல் பாதிப்பும் ஏற்படு வதில்லை. இதற்கு சுற்றுப்பு றச்சூழல் அனுமதியும் மாசுக் கட்டுபாட்டு வாரியத்தின் அனுமதியும் பெற்றுள்ளார்.

    இந்த செயற்கைவிறகு 400 டிகிரி வெப்பம் தாங்குவதாக அமைந்துள்ளது. இவர் இந்த செயற்கை விறகை காரைக் குடி, புதுக்கோட்டையில் உள்ள ஆவின் நிறுவனங்க ளுக்கு அனுப்பி வருகிறார். இது தவிர தூத்துக்குடி, நெல்லை, ராஜபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கிறார். திண்டுக் கல் டான்பெட் நிறுவனத்திற் கும் இந்த செயற்கை விறகு அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த குடிசைத்தொழிலில் நேரடியாக 20 பேரும், மறை முகமாக 150 முதல் மொத்தம் 200 நபர்கள் வேலை பார்த்து பயனடைந்து வருகிறார்கள். ஒரு டன் செயற்கை விறகு ரூ.7000-க்கு வாங்கப்படுகிறது. தினசரி 20 டன் உற்பத்தி செய்து வருகிறார். இதை விரி வுபடுத்துவது குறித்தும் திட்ட மிட்டு வருகிறார்.

    இந்த செயற்கை விறகை எதிர்கால திட்டத்தில் ஓட்டல் களுக்கு அனுப்பவும், அதற் கான நவீன அடுப்பு தயாரிக் கும் திட்டத்திலும் ஈடுபட்டுள் ளார். இதன் மூலம் சமையல் எரிவாயு பயன்படுத்துவது குறையும். செயற்கை விறகை பயன்படுத்துவதால் எரிபொ ருள் செலவு மிச்சமாகும். புகைஏற்படாது, சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படும். இதையும் எதிர்காலத்தில் விரிவுபடுத்த உள்ளேன் என்று ராஜேஷ் கூறினார்.

    இத்தகைய செயற்கை விறகு தயாரிப்பு குறித்து வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு இத்தொழில் துவங்குவது குறித்து ஆலோசனைகளை வழங்க உள்ளேன். எனவே இதற்கு அதிகாரிகளும், பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும் என்றார்.

    முதல்தலைமுறை தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் இவரது பணியினை ஊக்கப்ப டுத்தும் வகையில் 2018-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் விருதினையும், 2023-ம் ஆண்டில் டெட்கோ விருதி னையும், சிறுகுறு தொழில் சங்கத்தின்பல்வேறு விருதுக ளையும் பெற்றுள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது.

    ×