search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஜாராத்"

    • தமிழ்நாடு-சவுராஷ்டிரா கலாச்சார தொடர்பு தெரியவந்துள்ளது என்று குஜராத் மந்திரிகள் பேசினர்.
    • தமிழகம், குஜாராத்தில் உள்ள சவுராஷ்டிரா பாரம்பரியம் மற்றும் சமூகங்களை மதிக்கும் சங்கமம் ஆகும்.

    மதுரை

    தமிழகம்-சவுராஷ்டிரா இடையேயான கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் காசி தமிழ் சங்க மம் நிகழ்ச்சியை நடத்தியது. இதைத்தொடர்ந்து குஜராத் மாநிலம் சார்பில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மதுரை தெப்பக் குளம் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் குஜராத் மாநில சுகாதார மந்திரி ருஷிகேஷ்பாய் படேல் கலந்து கொண்டு பேசும்போது, மதுரையில் 5 லட்சத்திற் கும் மேற்பட்ட சவுராஷ்டிரா மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தமிழ்-குஜராத் பாரம்பரியங்களை கடைப்பிடித்து வருகின்ற னர். இந்த நிகழ்ச்சி மூலம் சவுராஷ்டிரா மக்களின் வரலாற்றை தமிழர்கள் அறிந்து கொள்ள இயலும் என்றார்.

    குஜராத் மாநில தொழில்துறை மந்திரி பல்வந்த்சிங் ராஜ்புத் பேசும்போது, தமிழகம்- குஜராத் இடையே ஜவுளி, பட்டு நெசவு, கோவில்கள் மற்றும் கட்டிடக்கலை ஆகிவற்றுடன் நெருங்கிய தொடர்பு உள்ளன. இது தமிழகம், குஜாராத்தில் உள்ள சவுராஷ்டிரா பாரம்பரியம் மற்றும் சமூகங்களை மதிக்கும் சங்கமம் ஆகும்.

    சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது கடந்த 2006-ம் ஆண்டு தமிழகத்தில் இருந்து ஒரு குழு, சவுராஷ்டிரா பல்கலை கழகத்திற்கு வந்தது. அப்போது தான் சவுராஷ்டிரா பல்கலைக்கழ கம், வர்த்தக சம்மேளனம் இணைந்து மதுரையில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    மதுரை சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்தை தொடர்ந்து குஜராத் அரசு சார்பில் கலாச்சார நிகழ்ச்சி கள், பேரணி ஆகியவை திண்டுக்கல், பரமக்குடி, சேலம், கும்ப கோணம், தஞ்சாவூர், நெல்லை, திருச்சியில் நடத்தப்படும் என்றார்.

    ×