என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிளீனர் படுகாயம்"
- ஏலகிரி மலைப்பாதையில் விபத்து
- ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே கூத்தாண்ட குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் கேசவன் (வயது 20), லாரி டிரைவர். இவர் நேற்று லாரியில் செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு ஏலகிரி மலைக்கு சென்றார்.
லாரி கவிழ்ந்தது
அங்கு செங்கலை இறக்கிவிட்டு மீண்டும் மலை உச்சியில் இருந்து அடிவாரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஒன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பாறை மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.
கிளீனர் படுகாயம்
இந்த விபத்தில் லாரியில் இருந்த கிளீனர் மண்டலவாடியை சேர்ந்த நந்தகுமார் படுகாயமடைந்தார். உடனே அவ்வழியாக வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து தகவலறிந்ததும் ஏலகிரிமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டம் மற்றும் போலீசார், திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளர் வெங்கடே சன் சாலை பணியாளர் தேவேந்திரன் மற்றும் சாலை பணி யாளர்கள் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் விபத்துக் குள்ளான லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்