search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிளீனர் படுகாயம்"

    • ஏலகிரி மலைப்பாதையில் விபத்து
    • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே கூத்தாண்ட குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் கேசவன் (வயது 20), லாரி டிரைவர். இவர் நேற்று லாரியில் செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு ஏலகிரி மலைக்கு சென்றார்.

    லாரி கவிழ்ந்தது

    அங்கு செங்கலை இறக்கிவிட்டு மீண்டும் மலை உச்சியில் இருந்து அடிவாரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது ஒன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பாறை மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.

    கிளீனர் படுகாயம்

    இந்த விபத்தில் லாரியில் இருந்த கிளீனர் மண்டலவாடியை சேர்ந்த நந்தகுமார் படுகாயமடைந்தார். உடனே அவ்வழியாக வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது குறித்து தகவலறிந்ததும் ஏலகிரிமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டம் மற்றும் போலீசார், திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளர் வெங்கடே சன் சாலை பணியாளர் தேவேந்திரன் மற்றும் சாலை பணி யாளர்கள் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் விபத்துக் குள்ளான லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×