search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்தவ கூட்டம்"

    • இந்து முன்னணி நிர்வாகி கைது
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    புத்தளம் அருகே உள்ள உசரவிளையை சேர்ந்தவர் ஜெபசிங் (வயது 35).

    புத்தளம் அருகே உள்ள வீரபாகுபதியில் ஜெபசிங் கிறிஸ்தவ கூட்டம் நடத்தினார். இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் அங்கு சென்ற சிலர், ஜெபசிங்கை தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்தனர்.

    இதுபற்றி ஜெபசிங், சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதில் கிறிஸ்தவ கூட்டம் நடக்கும் போது அரியப ெருமாள்விளையை சேர்ந்த சுரேஷ், மார்த்தாண்டன், புத்தளம் பேரூராட்சி 15- வது வார்டு உறுப்பினர் வீரபாகுபதியை சேர்ந்த விஜயகல்யாணி, கண்ணன், ஜெகன், தெற்கு புத்தளத்தை சேர்ந்த மகாலிங்கம், உசர விளையை சேர்ந்த சுடலைமணி என்ற மணி, ராமு, ஆகிய 8 பேர் மீது புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் சுசீந்திரம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் ஆகியோர் 8 பேர் மீதும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். இதில் ராஜாக்கமங்கலம் ஒன்றிய இந்து முன்னணி பொதுச் செயலாளர் அரிய பெருமாள் விளையை சேர்ந்த சுரேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×