search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரையப்பத்திரம்"

    • மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.
    • மே மாதம் 3-ந் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

     திருப்பூர் :

    தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை இதுவரை முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளாத ஒதுக்கீடுதாரர்கள் உள்ளனர். அவர்கள் அதை வட்டி தள்ளுபடியில் முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மூலமாக ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் முதலிபாளையம், பல்லடம் நிலை-1, நிலை-2, பெரியார் நகர், உடுமலை, வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் திட்டங்களில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். அவர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை இதுவரை முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளாதவர்கள், வட்டி தள்ளுபடியில் ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையில் உள்ள அசல் தொகையை நடைமுறையில் உள்ள தனிவட்டியுடன் மூன்று தவணையாகவோ செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம். இந்த சலுகை வருகிற மே மாதம் 3-ந் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். எந்த காரணத்தைக்கொண்டும் காலநீட்டிப்பு செய்யப்படாது. எனவே ஒதுக்கீடுதாரர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி கிரையப்பத்திரம் பெற்று பயன்பெறலாம்.

    இந்த தகவலை கோவை வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • எண். 194, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, நாள். 4.11.2022 வாயிலாக ஆணை வழங்கப்பட்டுள்ளது.
    • நிலுவையிலுள்ள அசல் தொகைக்கு நடைமுறையிலுள்ள தனிவட்டியுடன் மூன்று தவணைகளாகவோ செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    கோவை வீட்டு வசதிப்பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை இதுவரை முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுகொள்ளாத ஒதுக்கீடுதாரர்களுக்கு அதனை வட்டி தள்ளுபடியில் முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ள அரசால் அரசாணை (நிலை) எண். 194, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, நாள். 4.11.2022 வாயிலாக ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    அந்தஅரசாணையின்படி திருப்பூர் மாவட்டத்தில்செயல்படுத்தப்பட்டுள்ளமுதலிபாளையம், பல்லடம் நிலை -I,II, பெரியார் நகர், பொள்ளாச்சி, உடுமலை பேட்டை, வேலம்பாளையம் ஆகிய திட்டங்களில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை இதுவரை முழுவதுமாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளாத ஒதுக்கீடுதாரர்கள் வட்டி தள்ளுபடியில் அதனை ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையிலுள்ள அசல் தொகைக்கு நடைமுறையிலுள்ள தனிவட்டியுடன் மூன்று தவணைகளாகவோ செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் இச்சலுகை வருகிற 3.5.2023 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் எனவும், எக்காரணத்தைக்கொண்டும் கால நீட்டிப்பு செய்யப்படமாட்டாது . எனவே ஒதுக்கீடுதாரர்கள் இந்த அரிய வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி கிரையப்பத்திரம் பெற்று பயன்அடையுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது . இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    ×