search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம மக்கள் அஞ்சலி"

    • காளைக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • தாரை தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து கிராமம் முழுவதும் காளையின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வடமலைநாடு தெம்மாவூர் முத்து மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமாக ஜல்லிக்கட்டு காளை இருந்தது.

    இந்த காளை புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் பல பரிசுகளை வென்றுள்ளது. இந்த காளை மாடுபிடி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்து வந்தது.

    உயிரிழந்த ஜல்லிகட்டு காளை 

    உயிரிழந்த ஜல்லிகட்டு காளை 

    இந்நிலையில் அந்த காளைக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், காளை உயிரிழந்தது. இந்த காளையின் இறப்பு அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து கோவிலுக்கு கிராம மக்கள் மட்டுமின்றி, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஒன்று திரண்டு வந்து காளையின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் காளையின் உடல் லோடு வேனில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. தாரை தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து கிராமம் முழுவதும் காளையின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் அந்த கிராமத்தினர் ஏராளமானவர்கள் கண்ணீருடன் கலந்து கொண்டனர். பின்னர் காளையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

    • காளையை சாத்தம்பாடி கிராம மக்கள் தங்கள் வீட்டு பிள்ளையாக வளர்த்து பராமரித்து வந்தனர்.
    • ஊர் மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்தால் என்னென்ன சடங்குகள் செய்வார்களோ அதனை செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தில் வீரமுடையார் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று ஊர் மக்கள் சார்பில் வளர்க்கப்பட்டு வந்தது.

    இந்த காளை திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றதுடன் ஊருக்கும் பெருமை சேர்த்து வந்தது. இதனால் அந்த காளையை சாத்தம்பாடி கிராம மக்கள் தங்கள் வீட்டு பிள்ளையாக வளர்த்து பராமரித்து வந்தனர்.

    திருவிழா காலங்களில் இந்த காளைக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக கோவில் காளை நோய்வாய்பட்டு இருந்தது. நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.

    இதனையடுத்து அந்த ஊர் மக்கள் காளைக்கு தங்கள் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கினர். ஊர் மந்தையில் காளை வைக்கப்பட்டு அதற்கு மாலைகள், வேட்டி துண்டுகள் அணிவித்தும், சந்தனம், ஜவ்வாது பூசியும் வழிபட்டனர்.

    அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க காளை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வாண வேடிக்கையுடன் கோவில் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு ஊர் மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்தால் என்னென்ன சடங்குகள் செய்வார்களோ அதனை செய்தனர்.

    ×