search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம சேவை மையம்"

    • கிராமங்களில் வசதியில்லை. எனவே கிராமந்தோறும் சேவை மையம் என்ற திட்டத்தை அரசு செயல்படுத்த திட்டமிட்டது.
    • கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் கட்டிடங்கள் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது.

    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் உள்ள கிராமப்புற மக்கள் வருவாய்த்துறை, வேளாண்துறை உட்பட பல அரசுத்துறை திட்டங்கள், மானியங்கள் பெற அருகில் உள்ள நகரப்பகுதிக்கு சென்று விண்ணப்பங்களை வாங்கி சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

    மேலும் மின்கட்டணம் உட்பட கட்டணங்களை செலுத்தவும், கிராமங்களில் வசதியில்லை. எனவே கிராமந்தோறும் சேவை மையம் என்ற திட்டத்தை அரசு செயல்படுத்த திட்டமிட்டது.அதன்படி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தலா 14 லட்சம் ரூபாய், ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஊரக வளர்ச்சி துறை வாயிலாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் கட்டிடங்கள் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. சில கட்டிடங்கள் குடிமகன்கள் கூடாரமாகியுள்ளது. குடியிருப்பிலிருந்து தள்ளி கட்டப்பட்ட மைய கட்டிடங்களிலிருந்து கட்டுமான பொருட்கள் மற்றும் ஜன்னல் போன்றவற்றை காப்பாற்றவே ஊராட்சி நிர்வாகத்தினர் போராட வேண்டியுள்ளது.விரைவில் சேவை மைய பராமரிப்புக்கு ஆட்களை நியமிக்காவிட்டால் கட்டடங்களை பாதுகாப்பது சிரமமாகி விடும்.

    பல்வேறு ஆன்லைன் சேவைகளை பெற அருகில் உள்ள நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. நகரிலுள்ள மையங்களில் கூட்ட நெரிசல் காரணமாக நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியுள்ளது.எனவே கிராமங்களில் கட்டப்பட்ட சேவை மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து ஆன்லைன் சேவைகளை எளிதாக பெற திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.

    • மக்கள் தங்களுக்கு தேவையான சாதி, இருப்பிட சான்று போன்ற சான்றிதழ்கள் பெற கட்டப்பட்டது.
    • திருப்பந்தியூர் கிராமச் சேவை மையம் நெல் கொள்முதல் நிலையமாக மாறி உள்ளது.

    திருவள்ளூர் அருகே உள்ள திருப்பந்தியூர் ஊராட்சிக்குட்பட்டது பண்ணுார் கிராமம். இங்குள்ள கால்நடை மருத்துவமனை அருகே கடந்த 2014-15-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.14.55 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மையம் கட்டப்பட்டது.

    இதன் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான சாதி, இருப்பிட சான்று போன்ற சான்றிதழ்கள் பெற கட்டப்பட்டது. ஆனால் பணிகள் நிறைவடைந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை இந்த கிராம சேவை மையம் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இந்நிலையில் தற்போது திருப்பந்தியூர் கிராமச் சேவை மையம் நெல் கொள்முதல் நிலையமாக மாறி உள்ளது. அங்கு முழுவதும் நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட நிர்வாகம் கிராம சேவை மையத்தை முறையான மக்கள் சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×