search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரராமங்கள்"

    • ராஜபாளையம் அருகே, 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கொடியேற்றினார்.
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    ராஜபாளையம்,

    தமிழர் திருநாளை முன்னிட்டு ராஜபாளையம் ஒன்றிய பகுதிகளில் உள்ள கிருஷ்ணாபுரம், சுந்தரநாச்சியார்புரம் ஊராட்சிகள் உள்பட பல்வேறு ஊராட்சிகளிலும், பேரூர் பகுதிகளிலும் தி.மு.க கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான தங்கப்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    இந்த நிகழ்வில் பேரூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், பேரூர் செயலாளர்கள் இளங்கோவன், சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர்மன்கள் விநாயகமூர்த்தி, காளீஸ்வரி மாரிசெல்வம், கூட்டுறவு சங்கத்தலைவர் பாஸ்கர், கவுன்சிலர் காமராஜ், ஒன்றிய நிர்வாகிகள் காந்தி, குமார், ஒன்றிய இளைஞரணி சுரேஷ், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×