search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலர்கள் அஞ்சலி"

    • சேலம் மாநகர ஆயுதப் படை போலீஸ் ஏட்டு திடீரென மயங்கி விழுந்தார்.
    • மருத்துவமனை செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் மாநகர ஆயுதப் படையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் சின்னண்ணன் (வயது 40). இவர் லைன்மேடு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை பணிக்கு வந்தவர் மதியம் 12.45 மணி அளவில் ஆயுதப்படை மைதானத்தில் சக காவலர்களுடன் பணியில் இருந்தார். அப்போது சின்னண்ணன் திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்.

    இதைக் கண்ட சக காவலர்கள் உடனடியாக சின்னண்ணனை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சின்னண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சின்னண்ணன் மனைவி கவுரி கொடுத்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இறந்து போன சின்னண்ணனுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் போலீஸ் மரியாதையுடன் இன்று சின்னண்ணன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. சின்னண்ணனுக்கு 8 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 

    ×