search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளிகேசம்"

    • கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் அதிகளவு வந்து கொண்டிருந்தது.
    • நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதி புரத்தைச் சேர்ந்தவர் சுஷ்மா (வயது 26). சாப்ட்வேர் என்ஜினீயர்.

    டெல்லி துவாரகா நகர் பகுதியைச் சேர்ந்த ஷியாம் (28) சாப்ட்வேர் என்ஜினீயர். இருவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுஷ்மாவும் ஷியாமும் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் ஷியா முக்கும் சுஷ்மாவுக்கும் தலை தீபாவளி என்பதால் அதனை கொண்டாடு வதற்காக பார்வதிபுரத்திற்கு வந்திருந்தனர். தலை தீபா வளியை கொண்டாடிய இவர்கள் நேற்று காலை காளிகேசம் பகுதியை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். அந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் அதிகளவு வந்து கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் இருந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சுஷ்மா எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து சுஷ்மா கூச்சலிட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் சுஷ்மா தண்ணீரில் மூழ்கத் தொடங்கினார். மனைவியை காப்பாற்று வதற்காக ஷியாம் ஆற்றில் குதித்தார்.

    அப்போது அவர் அந்த பகுதியில் உள்ள சூழலில் சிக்கிக்கொண்டார். இவருக்கும் நீச்சல் தெரியாது. இதனால் தண்ணீரில் இருந்த சூழலில் இருந்து ஷியாமால் வெளியே வர முடியவில்லை. ஆனால் சுஷ்மா அந்த பகுதியில் உள்ள செடி ஒன்றை பிடித்துக் கொண்டு கரைக்கு பத்திரமாக வந்தார்.மனைவி கண்ணெதிரே ஷாயாம் தண்ணீரில் மூழ்கி மாயமானார்.இதனால் சுஷ்மா கூச்சலிட்டார். அங்கிருந்த சுற்றுலா பயணி கள் அங்கு திரண்டனர்.

    இதுகுறித்து நாகர் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரி விக்கப்பட்டது. தீய ணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஷியாம் பிணமாக மீட்கப்பட்டார். ஷியாம் உடலை பார்த்து சுஷ்மா கதறி அழுதார். இது குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஷியாமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலை தீபாவளி கொண்டாட வந்த இடத்தில் என்ஜினீயர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×