search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்பந்து போட்டி"

    • மாணவர்களுக்கான இலவச கால்பந்து பயிற்சி முகாம் நடைபெற்றது
    • லந்து கொண்ட மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    வீ. கே.புதூர்:

    தென்காசி ஹவுசிங் போர்டு நகராட்சி பூங்காவில் தென்காசி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் கோடை கால பள்ளி மாணவர்களுக்கான இலவச கால்பந்து பயிற்சி முகாம் நடைபெற்றது.

    கடந்த 15-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை தினந்தோறும் நடைபெற்ற இம்முகாமில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கால்பந்து பயிற்சி பெற்றனர். இதன் நிறைவு நாளை முன்னிட்டு நகராட்சி பூங்கா வளாகத்தில் முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமை தாங்கி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ரகுமான் சதாத், தி.மு.க. பகுத்தறிவு பேரவை ராமராஜ், தென்காசி நகர தி.மு.க. பொருளாளர் ஷேக் பரீத், ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சக்தி ஜெயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×