என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காதலி கடத்தல்"
- தனது மகளை காணாமல் பல இடங்களில் தேடி, போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- தனது மகளை கொண்டு வந்து ஒப்படைக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக கத்தியை காட்டி மிரட்டினார்.
மேலசொக்கநாதபுரம்:
போடி ஜே.கே.பட்டி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது47). இவரது மகன் கோகுல் என்பவரும் போடி முதலியார் காலனியை சேர்ந்த ராஜா மகள் மோனிகா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
சம்பவத்தன்று காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு மாயமாகினர். தனது மகளை காணாமல் பல இடங்களில் தேடி பார்த்த ராஜா இது குறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜா குடும்பத்தினர் போடி டவுன் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது போலீசார் காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது ராஜா தனது மகளை கொண்டு வந்து ஒப்படைக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக காமராஜை கத்தியை காட்டி மிரட்டினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் தலை மறைவான காதலர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்