search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரசார் மாலை"

    • பள்ளி குழந்தைகளுக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. இனிப்புகள் வழங்கினார்.
    • காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    மார்த்தாண்டம் :

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134 -வது பிறந்த நாள் விழா கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் ராஜீவ் சந்திப்பில் நடைபெற்றது.

    கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கருங்கல் பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரேசன், பேரூர் இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜேஷ்குமார், கிள்ளியூர் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் டிஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் மற்றும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஜவஹர்லால் நேருவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பள்ளி குழந்தைகளுக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. இனிப்புகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மரிய அருள் தாஸ், கிளன், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    ×