search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக் காதல்"

    • சத்யராஜ் (வயது 27). இவர் அதே ஊரை சேர்ந்த முத்துவேல் மகள் சசிகலா (24) என்பவரை கடந்த ஒரு வருடம் முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.
    • இந்நிலையில் சத்யராஜ் கழுத்து அறுபட்ட நிலையில் மொடையூர் சங்கராபரணி ஆற்றுப்பாலத்தின் கீழ் நேற்று முன்தினம் இரவு விழுந்து கிடந்தார்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகில் உள்ள ஜம்போதியை சேர்ந்த கணேசன் மகன் சத்யராஜ் (வயது 27). இவர் அதே ஊரை சேர்ந்த முத்துவேல் மகள் சசிகலா (24) என்பவரை கடந்த ஒரு வருடம் முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சத்யராஜ் கழுத்து அறுபட்ட நிலையில் மொடையூர் சங்கராபரணி ஆற்றுப்பாலத்தின் கீழ் நேற்று முன்தினம் இரவு விழுந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் செஞ்சி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர்.    அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த சத்யராஜை மீட்டு செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர்

    . சிகிச்சைக்கு பின்னர் அவரால் பேச முடியாததால் வெள்ளை தாளில் நடந்த சம்பவங்கள் குறித்து எழுதி போலீசாரிடம் கொடுத்தார்.     அதில், எனது மனைவி சசிகலாவும், அதே ஊரை சேர்ந்த சசிகலாவின் கள்ளக்காதலன் ஜானகி ராமன் ஆகியோர் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்தனர் என்றிருந்தது. இது குறித்த விசாரணையை போலீசார் தொடங்கினர்  அப்போது சத்தியராஜை பார்க்க சசிகலாவையும், ஜானகிராமனும் ஆஸ்பத் திரிக்கு வந்தனர். அங்கிருந்த போலீசார் 2 பேரையும் கைது செய்து, செஞ்சி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கழுத்து அறுக்கப் பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சத்யராஜ், மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனை, கள்ளக்காதலுனுடன் சேர்ந்து மனைவி கழுத்தை அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் செஞ்சி சுற்று வட்டார கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×