search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "களவாடிய பொருட்கள்"

    • சின்னசேலம் பள்ளியில் களவாடிய பொருட்களை மக்கள் வீசி சென்றனர்.
    • இன்னும் பல பொருள்கள் பொதுமக்கள் வீசி செல்வார்கள் என்பதால் காவல்துறை பொருட்களை தேடி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மர்மமான முறையில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி இறந்தார். மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு சமூக அமைப்பினர் கடந்த 17-ந் தேதி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் பள்ளி வளாகம் முழுவதும் சூறையாடப்பட்டது. கலவரத்தை பயன்படுத்தி மாணவர்களும், பொது மக்களும் பள்ளி அலுவலத்திலும், வகுப்பறையிலும் உள்ள கையில் கிடைத்த பொருட்களை திருடி சென்றனர். பள்ளியிலே எடுத்துச் சென்ற பொருட்களை திருப்பி ஒப்படைக்குமாறு காவல்துறை சார்பாகவும், தண்டோரா மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து பொருட்களை எடுத்துச் சென்ற பொதுமக்கள் இரவில் சாலை ஓரத்திலும், ஏரி கரையிலும் வீசி சென்றனர். பின்னர் அந்தப் பொருள்களை போலீசார் மீட்டு பள்ளி வளாகம் அருகே ஒரு இடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்னும் பல பொருள்கள் பொதுமக்கள் வீசி செல்வார்கள் என்பதால் காவல்துறை பொருட்களை தேடி வருகிறார்கள். 

    ×