search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்விகடன் முகாம்"

    • சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் வருகிற 29-ந் தேதி நடக்கிறது.
    • முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து உடனடி கடன் ஆணைகளும் வழங்கப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் அனைத்து வட்டாரங்களிலும் வருகிற 29-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, இளை யான்குடி, திருப்பு வனம், திருப்பத்தூர், தேவ கோட்டை, கல்லல், கண்ணங்குடி, சிங்கம்புணரி, எஸ்.புதூர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் முகாமிலும், சாக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடைபெறும் முகாமிலும் பங்கேற்கலாம்.

    விண்ணப்ப நகல், மாணவ-மாணவி மற்றும் பெற்றோரின் 2 புதிய புகைப்படம், வங்கி ஜாயிண்ட் அக்கவுண்ட் பாஸ்புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட Bonafide சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மற்றும் இள நிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

    கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் குறிப்பிட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து உடனடி கடன் ஆணைகளும் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×