search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் அழைப்பு"

    • படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600-ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600-ம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600-ம், மாற்றுத்தி றனாளிகளுக்கு ரூ.1000-ம் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    உதவி பெறும் நாளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும், மாற்றுத்திறனாளிகளுக்கு உச்சவயது வரம்பு எதுவும் இல்லை. பதிவு செய்து ஒரு ஆண்டு முடித்திருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானச் சான்று தேவையில்லை.

    மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப்படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கலாம் கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ மாணவிகளாக இருக்கக் கூடாது. ஆனால் தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இந்த அலுவலகத்தில் பதிவு செய்து 5 வருடங்கள் முடிவுற்று முறையாக புதுப்பித்திருப்பின் மற்றும் மாற்றுத்திறனாளி எனில் பதிவு செய்து ஓராண்டு முடிவுற்று காத்திருப்போர் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறலாம்.

    அதற்கான விண்ணப்ப படிவத்தை tnvelaivaaippu.gov.in மற்றும் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் விண்ணப்ப படிவத்தினை நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

    விண்ணப்ப படிவத்தில் பக்க எண் 7-ல் வருவாய்த் துறை சான்றில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் முத்தி ரையுடன் கையொப்பம் பெற்று, முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்துடன் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்கள், சாதிச்சா ன்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, புகைப்படம், ஆதார்கார்டு, ஸ்மார்ட் ரேஷன் கார்டு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்கள் இணைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், கலெக்டர் அலுவலக பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அடுத்த மாதம் 28-ந் தேதி நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை விண்ணப்பம் சமர்ப்பிக்க கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் கையொப்பம் பெற தேவையில்லை. ஏற்கனவே உதவித் தொகை பெற்று வருபவராக இருப்பின் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×