search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலசத்தை மீட்க வேண்டும்"

    • திருவதிகை அணைக்கட்டில் கெடிலம் ஆற்றங் கரையில் அய்யனார் கோவில் உள்ளது.
    • இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

    கடலூர்: பண்ருட்டி அருகே திருவதிகை அணைக்கட்டில் கெடிலம் ஆற்றங் கரையில் அய்யனார் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.பூஜைகள் செய்து விட்டு கோவிலை பூட்டிய பூசாரி வழக்கம் போல வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கோவிலை வந்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    கோவிலுக்குள் சென்று பார்த்த போது, கோபுரத்தில் 4 ஐம்பொன் கலசங்கள், நீர் மோட்டர் ஓயர், உண்டியல் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டி ருந்தது.இது தொடர்பான புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.பண்ருட்டி போலீசார் இந்த கொள்ளையர்க ளையும் விரைந்து பிடிக்க வேண்டும். அவர்களிடம் உள்ள 4 கலசங்களை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஓப்படைக்க வேண்டுமென ஆன்மீகவாதிகள் எதிர் பார்க்கின்றனர்.

    ×