search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரைகள் ஆய்வு"

    • கரையோரத்தில் சிற்பக்கூடங்கள், வீடுகள், பட்டறைகள், இறால் மீன் பண்ணைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
    • மழைக்காலத்தில் நீர்வரத்து பாதிக்கப்பட்டு குப்பைகள் ஒதுங்கி மாசடைந்து வருகிறது.

    மாமல்லபுரம்:

    கோவளம் அடுத்த முட்டுக்காடு முதல் மரக்காணம் வரையிலான பக்கிங்காம் கால்வாய் கரையோர பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.

    இதன் கரையோரத்தில் சிற்பக்கூடங்கள், வீடுகள், பட்டறைகள், இறால் மீன் பண்ணைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் மழைக்காலத்தில் நீர்வரத்து பாதிக்கப்பட்டு குப்பைகள் ஒதுங்கி மாசடைந்து வருகிறது.

    இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின்படி பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக அளவிட்டு, மேலும் ஆக்கிரமிக்காத வகையில் எல்லை கற்களை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரி திலிப்குமார் தலைமையில் நில அளவினர் குழுவினர் பக்கிங்காம் கால்வாயை அளவிட்டு, எல்லை நிர்ணயம் செய்வதற்காக கல் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×