search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருப்பு கோவில்"

    • கருப்பு கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பின் இந்த கண்மாயில் மீன்களை விட்டுச்செல்வது வழக்கம்.
    • பெரும்பாலானோருக்கு பல்வேறு ரக மீன்கள் கிலோ கணக்கில் கிடைத்தன.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள முதலைக்குளம் கருப்பு கோவில் அருகே முதலைக்குளம் கண்மாய் உள்ளது. 487 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கண்மாய் மூலம் இந்தப்பகுதியில் விவசாயம் நடைபெறுகிறது.

    கருப்பு கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பின் இந்த கண்மாயில் மீன்களை விட்டுச்செல்வது வழக்கம்.

    இந்த கண்மாயை ஏலம் விடும் நடைமுறை இல்லை. ஆனால் வருடந்தோறும் முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடி திருவிழா உற்சாகமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது.

    மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று இரவு முதல் முதலைக்குளம் கண்மாயை முற்றுகையிட்டனர். இன்று அதிகாலை 5 மணிக்கு கருப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஊராட்சி மன்றத்தலைவர் பூங்கொடி பாண்டி, பெரியாறு பாசன கூட்டமைப்பு தலைவர் ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜை முடிந்தபின் 3 முறை வெடிகள் வெடிக்கப்பட்டு மீன்பிடி திருவிழா தொடங்கியது. வெடி வெடித்து முடித்தவுடன் கரையில் நின்றிருந்த சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் முதலைக்குளம் கண்மாயில் திபுதிபுவென இறங்கி போட்டி போட்டுக்கொண்டு மீன்பிடித்தனர்.

    இதில் பெரும்பாலானோருக்கு பல்வேறு ரக மீன்கள் கிலோ கணக்கில் கிடைத்தன. அவர்கள் மகிழ்ச்சியுடன் அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

    ×