search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்தரங்கு நிகழ்ச்சி"

    • மாணவர்கள் தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டமான உயர்கல்விக்கான விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் நடத்தப்படும்.
    • தற்போதைய தொழில்நுட்பக்காலத்தில் செல்போன்களின் பாதகங்களை தவிர்த்து அதில் உள்ள சாதகமான விஷயங்களை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூரில் நான் முதல்வன் திட்டத்தின் சார்பில் உயர்வுக்கு படி எனும் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில், மாணவர்கள் தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டமான உயர்கல்விக்கான விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் நடத்தப்படும்.

    இந்நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை நிலையை உயர்த்திடவும் செயல்படுத்த ப்பட்டு வருகின்றது.

    தற்போதைய தொழில்நுட்பக்காலத்தில் செல்போன்களின் பாதகங்களை தவிர்த்து அதில் உள்ள சாதகமான விஷயங்களை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    இதில் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) கவுரி சங்கர், வட்டாட்சியர் பெருமாள் மற்றும் தொடர்புடைய துறைச் சார்ந்த அலுவலர்கள், ஆசிரியா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தவமாய் தவமிருந்து என்ற தலைப்பில், சிறப்பு கருத்தரங்கம் வருகிற 26ந் தேதி மாலை 3:30 மணி முதல் 5:30 வரை நடக்க உள்ளது.
    • மனிதவள மற்றும் வாழ்வியல் பயிற்சியாளர் ஈரோடு கதிர் பங்கேற்கிறார்.

     திருப்பூர் :

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு வழிகாட்டி ஊக்குவிக்கும் வகையில் யங் டீ அமைப்பு சார்பில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை காபி வித் எக்ஸ்பெர்ட் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்கும் வல்லுனர்களை அழைத்து வந்து ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கான, ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    அதன்படி தவமாய் தவமிருந்து என்ற தலைப்பில், சிறப்பு கருத்தரங்கம் வருகிற 26ந் தேதி மாலை 3:30 மணி முதல் 5:30 வரை நடக்க உள்ளது. திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் நடக்கும் நிகழ்ச்சியில் மனிதவள மற்றும் வாழ்வியல் பயிற்சியாளர் ஈரோடு கதிர் பங்கேற்கிறார்.

    தலைமுறை இடைவெளி, குடும்ப தொழில் தொடர்பான புரிதல், சிக்கல் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான தீர்வுகள் குறித்து வாழ்வியல் பயிற்சியாளர் பேச இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் ஏற்றுமதியாளர்கள் முன்பதிவு செய்ய வேண்டுமென திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    ×