search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருகும்"

    • கன்னி பூ சாகுபடி பணியில் விவசாயிகள்
    • 3000 ஹெக்டேரில் நெற்பயிர்கள்

    நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். 6500 ஹெக்டேரில் இந்த ஆண்டு சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஆனால் 5000 ஹெக்டேரில் மட்டுமே தற்போது சாகுபடி செய்யப் பட்டுள்ளது. சாகுபடி பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. கன்னி பூ சாகுபடிக்காக கடந்த ஜூன் 1-ந்தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது.பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் கடைமடை பகுதி மக்களுக்கு தண்ணீர் செல்ல வில்லை.இதனால் விவசாயிகள் பயிர் செய்த நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து சானல்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். கலெக்டரை சந்தித்தும் மனு அளித்தனர். இதன் அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் சானல்கள் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இந்தநிலையில் தற்போது கன்னிப்பூ சாகுபடி செய் யப்பட்ட 3000 ஹெக்டேரில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. பறக்கை பகுதிகளில் நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் செண்பகராமன் புதூர், அஞ்சுகிராமம் பகுதிகளில் பயிர் செய்த நெற்பயிர்கள் தண்ணீர் கிடைக்காமல் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.செண்பகராமன் புதூர் பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் வயல்கள் வெடித்து காணப்படுகின்றன. இதனால் நெற்ப யிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நெற்பயிர்கள் கருகும் நிலைக்கு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதேபோல் அஞ்சுகிராமம் பகுதியில் பயிர் செய்த நெற்பயிர்களுக்கு தண்ணீர் விலைக்கு வாங்கி பாய்க்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு பொதுப் பணித்துறை அதிகாரிகள் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ள பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதி களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதேபோல் சிற்றார் பட்டணம் கால்வாய் கடை மடை பகுதியிலும் பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்கள் பாதிக்கக்கூ டிய நிலையில் உள்ளது. எனவே அந்த கால்வாயிலும் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாய பிரதிநிதிகள் கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

    ×