search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரடி விரட்டியடிப்பு"

    • குடியிருப்புப் பகுதியில் சுற்றி திரிந்தது.
    • பொதுமக்கள் அச்சம்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூர், வடக்குப்பட்டு, இராமநாயக்கன்பேட்டை பகுதியில் கரடி ஒன்று அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு இருந்தது.

    இதை பொதுமக்கள் பலரும் பார்த்து அச்சத்துடன் அதனை விரட்டியுள்ளனர். ஆனால் சுற்றி சுற்றி கிராமப் பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதியிலும் அந்த கரடி சுற்றியது.

    இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் ஊருக்குள் நடமாடும் கரடியை விரைந்து கூண்டுகள் அமைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் வனத்துறையினர் அங்கு சென்று கரடி நடமாட்டத்தை கண்காணித்தனர். கிராம பகுதியை ஒட்டி நடமாடிக் கொண்டிருந்த கரடியை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து கரடியை அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ×