search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்தி வெட்டு"

    • விரட்டி வெட்டும் வீடியோ காட்சிகள் பரவுகிறது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் அழகாபுரி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ் (வயது 34) பெயிண்டர்.

    கடைக்கு வந்த இடத்தில் பழக்கம்

    அதே பகுதியை சேர்ந்த ராஜா மகன் அரவிந்த் (23) பைபாஸ் சாலையில் பிரபல தனியார் எலக்ட்ரீக்கல் செல்போன், டி.வி. பிரிட்ஜ் விற்பனை கடையில் வேலை செய்து வருகிறார்.

    சதீசின் மனைவி செல்போன் வாங்க வந்தபோது அவருடன் அரவிந்த்துக்கு பழக்கம் ஏற்பட்டது. அது கள்ளக்காதலாக மாறியது.

    இதனையறிந்த சதீஷ் கள்ளக்காதலை கைவிடுமாறு 2 பேரையும் எச்சரித்தார். ஆனாலும் அரவிந்த் தொடர்ந்து சதீசின் மனைவியிடம் பேசியதாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் மாலை சதீஷ் கத்தியுடன் அரவிந்த் பணியாற்றும் கடைக்கு வெளியே காத்திருந்தார்.

    சாலையில் சென்ற ஒரு சிறுவனை அழைத்து கடையில் உள்ள அரவிந்த்தை வெளியே வரும்படி கூறினார்.

    அதன் பின் வெளியே வந்த அரவிந்த்துடன் கடும் வாக்கு வாதத்தில் சதீஷ் ஈடுபட்டார். சதீஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அரவிந்தை வெட்டினார். அவரிடம் இருந்து தப்பியோடிய அரவிந்த் கடைக்குள் சென்று பதுங்கிக் கொண்டார். இதனை நேரில் கண்ட கடை ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர். சதீஷ் வெளியே நின்று எச்சரித்தப்படி அங்கிருந்து சென்று விட்டார்.

    ரத்த வெள்ளத்தில் விழுந்த அரவிந்தை கடை ஊழியர்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இது தொடர்பாக ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீசை கைது செய்தனர்.

    அரவிந்த்தை சதீஷ் வெட்டும் காட்சிகள் அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    ×