என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்"
- போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினார்
- 3 பவுன் நகை பறிமுதல்
சோளிங்கர்:
சோளிங்கர் பஜார் தெருவில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி நகை வாங்குவது போல் வந்த 3 பெண்கள் போலிநகையை வைத்து விட்டு 3 பவுன் நகையை எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சோளிங்கர் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 3 பெண்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று தக்கான்குளம் அருகே சோளிங்கர் போலீசார் ரோந்து பணியில் அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல் பட்டி கிராமத்தை சேர்ந்த மாதம்மாள் (வயது 56) என்பதும், சோளிங்கர் பஜார் தெருவில் உள்ள நகைக்கடையில் 3 பவுன் நகை திருடியதும் தெரியவந்தது.
அவரிடம் இருந்த 3 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பெண்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்